Showing posts with label உரையாடல். Show all posts
Showing posts with label உரையாடல். Show all posts

Tuesday, August 13, 2013

சார், ஹிந்து தமிழ் பேப்பர் சார்


இன்னிக்கு அதிகாலை ஆறு மணிக்கு காலிங் பெல் சத்தம். இரண்டு பேர் பக்கா யூனிஃபார்மல வந்து, “நாங்க ப்ரஸ்ல இருந்து வர்றோம். ”குடும்பத்தலைவர்”ட்ட முக்கியமான விஷயம் பேசனும்”னு சொல்லி இருக்காங்க. எங்கம்மா என்னமோ ஏதோனு என்னை எழுப்பி விட, நான் “ஆறு மணிக்கு கூப்ட்டு விசாரிக்கிற அளவுக்கு என்ன பண்ணிட்டோம்”னு யோசிச்சுட்டே வந்தேன்.

சார், நாங்க “ஹிந்து” நியூஸ் பேப்பர்ல இருந்து வர்றோம். ஹிந்துல தமிழ் பேப்பர் வரப்போகுது. ஆறுமாத சந்தா 375 ரூபாய் சார், கட்டுறீங்களா?

(அடப்பாவிகளா, உங்க கடமையுணர்ச்சிக்கு அளவே இல்லயாய்யா) பேப்பர் என்ன பெயர் சொன்னீங்க?

”ஹிந்து” சார்

(யே, என்னைப்பார்த்தா கொஞ்சம் மாங்கா மாதிரி தான் இருக்கும், அதுக்காக இப்படி ஓட்டாதே!) இல்லங்க. தமிழ்ல வர்றதுக்குப் பெயர் என்ன?

ஹிந்து தமிழ் பேப்பர் சார்.

(சூப்பர் ஆன்சர்) சரி விடுங்க, வழக்கமா புதுப்பேப்பர் வர்றதுக்கு முன்னாடி சாம்பிள் வருமே, அது மாதிரி இருக்கா? (ஓசி சாம்பிள் வாங்கி யூஸ் பண்ணிப்பார்க்காட்டா நாம என்ன தமிழன்)

இல்ல சார், ப்ரௌச்சர் தான் இருக்கு. பார்க்குறீங்களா?

சரி கொடுங்க. (அது ஓசி தானே!)

இந்தாங்க சார். வேற காப்பி இல்ல, பார்த்துட்டு திருப்பிக் கொடுத்துருங்க.

(அது வேறயா, தெளிவாத்தாய்யா மார்க்கெட்டிங் பண்றீங்க) இல்லங்க சந்தோசம், நீங்களே வச்சுக்கங்க.

சார், ஆறு மாத சந்தா போட்றவா சார்?

(காரியத்துல கண்ணா இருக்காராமாம், ஆனா நம்மகிட்டயேவா) இல்லங்க பேப்பர் வரட்டும், அப்புறம் பார்த்துக்கலாம்.

சார், ஹிந்து சார். ஆஃபர் பிறகு கிடைக்காது சார்.

(நாங்கெல்லாம் பல வருசமா தினத்தந்தியவே டீக்கடை க்யூல நின்னு தான் ஓசில படிச்சிட்டு வர்றோம், எங்ககிட்டயேவா?) ரொம்ப நன்றி சார். போய்ட்டு வாங்க சார்.

ஆனாலும் “தி ஹிந்து”வின் மார்க்கெட்டிங் திறமை வியக்க வைக்கிறது. ஊர் முழுக்க இதுக்குன்னு நூத்துக்கணக்கான இளைஞர்களை இறக்கி விட்டிருக்காங்க. ஆனா, பேப்பருக்கு என்ன பெயர்னு சொல்ல மாட்டாங்களாம். எப்போல இருந்து வருதுன்னு தெரியாது. மாடல், ஃப்ரிவியூ எதுவும் கிடையாது. சந்தா மட்டும் முதல்லயே கட்டிட்டு பேப்பர் வர்றதுக்காக தேவுடு காக்கனுமாம். ஒரு வேளை நாம கொடுக்குற காசெல்லாம் சேர்த்து வச்சு தான் பூஜை போடப்போறாங்களோ என்னவோ!

******

Friday, December 28, 2012

செவியிடை மனிதர்கள் - 5


ஹலோ, இந்த நம்பர்ல இருந்து ஒரு கால் வந்திருந்தது. யாரு கூப்பிட்டது?

எப்போ?

ஒரு அஞ்சு நிமிசம் முன்னாடி

ஓ, அதுவா சார் என் பொண்ணு தான் கூப்பிட்டா, இப்போ உங்களைப் பார்க்க தான் வந்திட்டு இருக்கா?

யாரு பேசுறதுன்னு தெரியலயே?

நான் அவங்க அம்மா பேசுறேன் சார். என்னை உங்களுக்குத் தெரியாது. என் பொண்னுக்கு தான் சார் உங்களைத் தெரியும்.

இல்லம்மா, ஃபோன் பண்ணவங்க பெயர் என்ன?

ஃபோன் எங்க வீட்டுக்காரர் பெயர்ல தான் இருக்கு. ஆனா பேசுனது என் பொண்ணு.

அது சரிம்மா, நான் பி.எஸ்.என்.எல். ல இருக்கேன். என்ன விசயமா என்னைக் கூப்பிட்டாங்க தெரியுமா?

ஆமா சார், பி.எஸ்.என்.எல் செல்ல இருந்து தான் கூப்பிட்டா. இப்ப உங்களைப் பார்க்க தான் வர்றா.

சரி, எங்க வர்றாங்க?

ஆமா சார், எங்க வீட்டுல இருந்து தான் வர்றா.

அப்படியா, ரொம்ப சந்தோசம். இதுக்கு மேல என்னால முடியாதும்மா. ஃபோனை வச்சுடுறேன். பேசுனதுக்கு ரொம்ப நன்றி.

******

Wednesday, September 26, 2012

செவியிடை மனிதர்கள் - 4


ஹலோ...

ஹலோ....

ஏய் பாலா, குமார் பேசுறேன்டா. எப்படிடா இருக்க?

டேய்... நல்லா இருக்கேன்டா. இப்ப எங்கடா இருக்க?

இங்க வந்து ஒரு வருசம் ஆச்சு. கேக்ரான் மேக்ரான்னு ஒரு கம்பெனி. அங்க தான் வேலை பார்க்குறேன்.

ஓ கேக்ரான் மேக்ரானா. அங்க என் ஃபிரண்டு ஒருத்தர் வொர்க் பண்றார் டா

அட, இங்க இருக்குறதே ஒரு இருபது பேர் தான். யாருடா அது ?

அவர் பெயர் ...................................................

ஓ அவனா, சரியான வெளங்காவெட்டிடா.. எப்பப்பாரு எதெயாவது தமிழ்ல டைப் பண்ணீட்டே கெடப்பான்டா

டேய், அவர் ஒரு பிரபல பதிவர் தெரியுமுல்ல

என்ன எழவோ, ஆமா ஒனக்கு எப்படிடா பழக்கம்

இல்ல நானும் பதிவெல்லாம் எழுதுவேன், அப்போ அறிமுகம்.

டேய், நீயும் வெளங்காவெட்டி கோஷ்ட்டியாடா, உங்களையெல்லாம் ^^@&^@#$@(&$@@)$@&@)_$@^@$%%@*@#_

ஹலோ, ஹலோ... டேய் இங்க சிக்னல் சரியா கெடைக்கல. நான் அப்புறமா கூப்பிட்றேன், பை.

******

#எத்தகையதொரு கொடுமையான சமூகச்சூழலில் எழுத்துப்பணியாற்ற வேண்டியிருக்கிறது பாருங்கள் !!!

#புனைவுன்னு சொன்னா எதிர்கேள்வி கேட்கக்கூடாது.

Thursday, July 5, 2012

செவியிடை மனிதர்கள் - 3


வணக்கம், மன்னார் அன் கம்பெனிங்களா?

ஆமா, நீங்க?

நான் கவிஞர் காத்துவாயன் பேசுறேன். நம்ம பதிப்பகத்திலிருந்து ஒரு கவிதைத்தொகுப்பு போடலாம்னு இருக்கேன்.

தாராளமா பண்ணலாமே

என் ஃபேஸ்புக் ஸ்டேடஸ்க்கு குறைஞ்சது 300 லைக்ஸ் விழும், டிவிட்டர்ல மட்டும் 3452 ஃபாலோயர்ஸ் இருக்காங்க. நான் ஒன்னும் எழுதாட்டியும் அதை ரீட்வீட் பண்ணீட்டே இருப்பாங்க. பதிவுன்னா 2587 ஹிட்ஸ் வரும், பின்னூட்டம் சராசரியா 432 வரும், அலெஸ்கா ரேட்டிங்கல........

சரி சார், இதெல்லாம் எதுக்கு சொல்றீங்க?

இல்லை நான் ஒரு ‘பிரபல பதிவர்’ன்னு சொல்ல வந்தேன். எனக்கு புத்தகம் போடனும்னெல்லாம் விருப்பம் இல்ல, என் வாசகர் வட்டத்துல தீர்மானம் எடுத்துட்டாங்க. என்னால மீற முடியல.

வாசகர்கள் கேட்டா கண்டிப்பா பண்ணித் தான் சார் ஆகனும்.

சந்தோசம், தொகுப்புக்கு தலைப்பு “அகவெளியெங்கும் அலைந்து திரியும் கொடுநடை கதகளி”. சரி தானே?

சார், ரொம்ப கிளாசிக்கலா இருக்கே. கொஞ்சம் கமர்சியலைஸ் பண்ண முடியுமா?

இல்ல நண்பரே, எல்லாக் கவிதையிலயும் உள்ளொளி பொங்கும் ஞான அலை இருக்கும். அதான் வைப்ரேடிங்கா தலைப்பு வச்சேன், இல்லாட்டியும் பரவால்ல. “உள்ளே வெளியே விளையாட்டும், அஞ்சு காசு கமர்கட்டும்” ஓகே வா?

சூப்பர் சார். 

அதிருக்கட்டும் கவிதைத் தொகுப்புன்னா எவ்ளோ வரும்?

பக்காவா பண்ணுவோம் சார். ஒரு முப்பதாயிரம் வரும்.

சரி, நீங்க என்ன பண்றீங்க, என் பிளாக்ல இருக்க கவிதையெல்லாம் எடுத்து புக்கா போடுங்க. நீங்க ஒரு பதினஞ்சாயிரம் எடுத்துக்கங்க. மீதி பதினஞ்சாயிரம் எனக்கு எப்ப அனுப்பி வைக்கிறீங்க?

என்னது, அனுப்பி வைக்கவா ? சார், முப்பதாயிரம் நீங்க தந்தா கவிதைத்தொகுப்பு வரும்.

இல்லாட்டி...

வாய்ல நல்லா கெட்ட வார்த்தையா வரும். மொத்ல்ல வைய்யா ஃபோனை.

டொக்.


******

Thursday, July 14, 2011

செவியிடை மனிதர்கள் - 2

ஹலோ, யாரு பேசுறது ?

நீங்க தானே கூப்டிங்க, நீங்க யாருனு சொல்லுங்க?

ஹலோ பாலா, உங்களைக் கூப்பிட்டுட்டேனா! ஸாரி...

பரவால்ல, நீங்க யாருன்னு தெரியலையே.... ஹலோ...

டிக். (போன் கட்)

(இரண்டு நிமிடத்திற்கு பிறகு, மறுபடியும் அதே நம்பரிலிருந்து...)

ஹலோ, யாரு பேசுறது ?

ஹலோ, மறுபடியும் என்னைத் தான் கூப்பிட்டு இருக்கீங்க.

ஸாரி, நீங்க யாரு?

நீங்க தானே கூப்டிங்க, நீங்க முதல்ல சொல்லுங்க.

ஓ ! ஸாரி பாலா ... மறுபடியும் உங்களையே கூப்ட்டேனா....

அது சரிங்க, நீங்க யாரு ? என்ன நம்பர் டயல் பண்ணனும்?

டிக்.

(மறுபடியும் அடுத்த நிமிசமே அதே 'கால்' வர இம்முறை நான் எடுக்கவில்லை. உடனே அடுத்து குறுஞ்செய்தி.

"ஸாரி பாலா, தெரியாம உங்களைக் கூப்ட்டுட்டேன், ரியலி ஸாரி."

# டேய், யாருடா நீ உனக்கு என்ன தான் வேணும். 

ஸாரி, ஸாரி னு சொல்லி கழுத்தறுக்குற சனியன் யாருன்னு மட்டும் சொல்லித் தொலைய மாட்டுது.

ஆனா ஒன்னு மட்டும் புரியுது. "நீ அந்த வேலைக்கு சரிப்பட மாட்ட" ன்னு  எல்லாரும் சொன்னப்ப வடிவேலு மனசு எப்படி உறுத்தி இருக்கும்னு இப்ப நல்லா தெரியுது.


Wednesday, July 13, 2011

செவியிடை மனிதர்கள் - 1

ஹலோ !  .... டேய் உன்னக் கூப்பிடனும்னு நெனச்சுட்டே இருந்தேன், நீயே கூப்டுட்ட. எப்டிடா இருக்க?

மூதேவி,  நினைக்க மட்டுமில்லடா. கூப்டவே செஞ்சிருக்க. நான் ஹலோ, ஹலோ ன்னு பத்து நிமிசமா கத்திட்டு இருக்கேன். நீ செல்'ல கவனிக்கவே இல்ல, அதான் கட் பண்ணீட்டு நான் கூப்டேன்.

சரி, சரி... இங்க ஆஃபீஸில ஒரு முக்கியமான மீட்டிங்ல இருக்கேன், பிறகு பேசட்டா?

அதான் தெரியுதே, பக்கத்துல யாரு உங்க மேனேஜரா? நல்லா வண்ட வண்டயா திட்றான். நீயும் சளைக்காம 'யெஸ் சார்' போட்டுட்டு இருக்க. இதுக்குப் பேரு தான் மீட்டிங்'கா ?

அதான் கேட்டுட்டேல, மூடிட்டு செல்'ல கட் பண்ணு, நான் அப்புறம் பேசுறேன்.

டிக்.

Wednesday, October 13, 2010

இன்னும் சில மனிதர்கள்

"நம்ம வடக்குப்பட்டி ராமசாமி தெரியும்ல..."

"தெரியுமாவா ! கடன்கார நாயி... நேத்து கூட பார்த்தேன். கொடுத்த காசை திருப்பித்தர வக்கில்லை, உனக்கெல்லாம் எதுக்குடா வேட்டிசட்டைன்னு மானாவாரியா கேட்டுட்டு வந்தேன்."

"இல்லப்பா, அவர் நேத்து ராத்திரி தூக்கு மாட்டி செத்துட்டாராம்."

"அடடா, தங்கமான மனுசனாச்சேப்பா ! ஒரு வார்த்தை அதிர்ந்து பேசமாட்டாரே. நேத்து கூட ரொம்ப நேரம் மனசு விட்டு பேசிட்டு இருந்தேன். ஒரு வார்த்தை என்ன பிரச்சனைன்னு சொல்லவே இல்ல. இப்படித் தான் முட்டாள்த்தனமா ஏதாவது செய்ய வேண்டியது. என்ன மனுசங்களோப்பா !"

***************************************

"என்னண்ணே, இத்தனை வருசமா இந்த டிவிஷன்ல ராத்திரி பகலா வேலை பார்த்திருக்கீங்க. கொஞ்சம் கூட ஈவு இரக்கம் இல்லாம தூக்கி அடிச்சிட்டானுகளே, யூனியன் கேஸ் எடுப்போம்ணே!"

"அதெல்லாம் ஒன்னும் வேணாம்ப்பா!"

"இல்லண்ணே, உங்கள வேணும்னே கஷ்டப்படுத்துறாங்கண்ணே!"

"இருக்கட்டும்பா, புது டிவிஷனுக்குப் போய், இதைவிட இன்னும் நல்லா வேலை பார்த்து அவனுக மூக்கை உடைக்கிறேனா இல்லையா பாரு."

"இது என்னண்ணே லாஜிக், சத்தியமா புரியல"

"அது அப்படித்தான்பா!"

***************************************

"மச்சி, ஏற்கனவே கடியான சப்ஜெக்ட், இதுல கொஸ்டீன் பேப்பர் வேற டஃப். கண்டிப்பா நிறைய பேருக்கு கப்பு விழத்தான் போகுது!"

"சும்மா புலம்பாதே, இந்த பேப்பர் எழுதுன எல்லாரும் தூக்குறோமா இல்லையானு பாரு!"

"என்னடா உளர்ற?"

"பின்ன, அட்டானமஸ் காலேஜ்ல ஹச்.ஓ.டி எடுத்த பேப்பர்ல நிறைய அரியர் விழுமா, அதெல்லாம் தலைமை நம்ம காப்பாத்தும்டா!"

" ஓ, இப்படி ஒரு ஈகோ பாய்ண்ட் இருக்குல்ல!"

***************************************