Monday, August 23, 2010

பெயரில்லாதவை - 23/08/2010

எனக்கு குறுந்தகவலில் வந்த கேள்வி.

" நான் மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் உயிருக்குக் போராடிக் கொண்டிருக்கிறேன் என நினைத்துக் கொள்ளவும், இந்த சூழ்நிலையில் எனக்கு ஒரு பாடலை அர்ப்பணிக்க வேண்டுமென்றால் நீ எந்த பாடலைத் தேர்ந்தெடுப்பாய்? என் மேல் உண்மையிலேயே அக்கறை இருந்தால், உடனடி பதில் அவசியம்"

அலுவலக மண்டைக்காய்ச்சலின் உச்சத்தில் இருந்த நேரத்தில் வந்த இந்த குறுந்தகவலுக்கு நான் அனுப்பிய பதில்,

"வெளக்கெண்ணைகளா, சாகப் போற நேரத்துல கூட பாட்டு டெடிகேட் பண்ணாத் தான் சாவீங்களா ? எவனோ ராப்பகலா உருவாக்குனதை நீங்க நோகாம டெடிகேட் பண்ணுவீங்களாக்கும் &%^&%^*& ???"

எதிர்முனையைப் புரிந்த வரையில், "என்ன பாட்டு பிடிக்கும்னு கேட்டா அதுக்குக் கூட திட்டுவீங்க?" என்ற பதிலை எதிர்பார்த்திருந்தேன். நல்ல வேளை, எதிர்முனை என்னை நன்றாகப் புரிந்து வைத்திருக்கும் நட்பு என்பதால் ஒரு ஸ்மைலி மட்டும் பதிலாக வந்தது. 


******


சென்ற வாரம் மதுரை நகர் முழுவதையும் ஒரு போஸ்டர் ஆச்சர்யப்படுத்திக் கொண்டிருந்தது.  வழக்கம் போல் அண்ணன் "அ"னாவை வாழ்த்தி தான் என்றாலும், "கலைஞரின் குமுகியே வருக!" என்ற வாசகம் புதிதாக இருந்தது. காட்டு யானைகளை கட்டுக்குள் கொண்டு வர பயன்படுத்தப்படும் "கும்கி" யானையாக அண்ணன் இருக்கிறார் என்பதைத் தான் உடன்பிறப்புகள் மெய்சிலிர்க்க புகழ்ந்திருக்கிறார்கள் என யூகிக்கிறேன். வாசகம் தயாரிப்பில் இயங்கிக் கொண்டிருக்கும் பதினோரு நபர் குழுவிற்கு மதுரை மக்களின் சார்பாக வாழ்த்துகள். பின்னே, ஒரு இரண்டு நொடியாவது சிரிக்க வைக்கிறார்களே !


******

மெகா சீரியல் கேப்பில் வேறு வழியில்லாமல் விளம்பரம் பார்க்கும் வேலையற்ற என் போன்றோர்க்கு ஒரு அறைகூவல்: "கோடி கோடியாய் நாயகர்களுக்கு கொடுத்து எடுக்கப்படும் விளம்பரங்கள், ஒன்று சுவாரஸ்யமாகவாவது இருக்க வேண்டும், இல்லை விளம்பரப் படுத்தப்படும் பொருள், நடிக்கும் நடிகர் பிம்பத்தையாவது உயர்த்த வேண்டும். இது எதுவும் இல்லாமல் கடுப்பேற்றும் உப்பு சப்பில்லாத நகைக்கடை, அடகுக்கடை விளம்பரங்கள் வரும் போது சேனல் மாற்றி நம் புறக்கணிப்பை தெரிவிப்போம், வாருங்கள்!"  

******

மனுஷ்யபுத்திரனின் "அதீதத்தின் ருசி" வாசித்தேன். ( பின்ன சும்மாவா, கவிதைத் தொகுப்பெல்லாம் வாசிப்போமாக்கும்!!!).  இரண்டு நாட்களாக மூக்கால் பேசுவது போலவே ஒரு உணர்வு. கவிதை எங்கெங்கும் அவ்வளவு மெல்லினம். 
சட்டென மனதில் ஒட்டிக் கொண்ட இந்த வரிகள், இறங்க மறுக்கின்றன. காரணம் தெரியவில்லை. 

"இளமையில் தேவதையாக இருந்தவர்கள் 
சாத்தானாக மாறும்போது 
பிறந்ததிலிருந்தே 
சாத்தானாக இருப்பவர்களை 
நடுநடுங்கச்செய்தார்கள்" 

******

கடந்த ஞாயிறு கவிஞர் நேசமித்ரனை மதுரைப் பதிவர்கள் சந்தித்தோம். பேச்சினூடே அவர் சொன்ன ஒரு விஷயம் ஏற்புடையதாய் இல்லை. எவ்வளவு மறுத்தும் அவர் பிடிவாதம் பிடிக்கவே வேறு வழியில்லாமல் ஒப்புக்கு சரி என்று ஒப்புக் கொண்டு வந்து விட்டேன். அவர் சொன்ன விஷயம், நான் சுவாரஸ்யமாக எழுதுகிறேனாம், இன்னும் நிறைய எழுத வேண்டுமாம். அது சரி. நான் என்ன வச்சுக்கிட்டா சார் வஞ்சகம் பண்றேன். 

******

நன்றி நண்பர்களே, மீண்டும் சந்திப்போம்.

******

Sunday, August 8, 2010

சமகால ட்வித்துவ தெறிப்புகளின் இன்னொரு காப்பி.

எழுத்தாளர்கள் சிலர் ஏன் பெண்பெயரில் எழுதுகிறார்கள் என ஓர் உளவியல் புத்தகம் எழுதுனும். அதை ஒரு பெண்பெயரில் எழுதலாமா என்று தான் பலத்த யோசனை.

என் கிருபை மட்டும் உனக்குப் போதும். அதற்கு மேல் கேட்டால் கெட்ட கோபம் வரும்.

கலாநிதிமாறன் இது செய்து, கலாநிதிமாறன் அது செய்து, கலாநிதிமாறன் ஏதேதோ செய்த எந்திரன் படத்தில் ரஜினி என்று யாரோ ஒருவர் நடித்திருக்கிறாராம்.

வீணாப்போனோர் அமைப்பின் தானைத்தலைவர் திடீரென காணாமல் போனதால் காணாப்போனோர் கழகத்தின் தலைவர் தானாக கூடுதல்பொறுப்பு வகிக்கிறாராமே, உண்மையா?

பரலோகத்தில் இருக்கும் பரமபிதாவின் பரிசுத்த ஆவிவே, ஊற்றி வைத்திருக்கும் மாவை சீக்கிரம் வேகவைத்து இட்லியாக்கிக் கொடும! பசி உயிர் போகுது.

உன்னை நீயாக இருக்கவிடாத சுமையை உன் நன்மைகருதி ஒளித்துவைத்திருந்தேன். விமர்சனத்தைப் பொறுக்க முடியாத நீ இனி முகஸ்துதியை சுமந்து செத்தொழிவாய்

ஐயையோ, எனது ட்விட்டர் ஐடி "writer" என துவங்கவில்லையே. அப்போ நான் பெரிய எழுத்தாளனாகி தமிழுக்கு சேவை செய்யவே முடியாதா! #வருதுபாருங்கசந்தேகம்

இன்று கோமாளிமுகமூடி அணிந்துள்ளதால் என்ன வெறுப்பேற்றினாலும் சிரிப்புதான். ஒருநாள் போராளிமுகமூடி கிடைக்கையில் தெரியும் இந்தசிரிப்பின் வன்மம்

பிரபலஎழுத்தாளர் தன்பெயர்மறைத்து வெளியிடும் இணையபத்திக்கும் பயங்கரவரவேற்பென்றார்.அவர் எழுதுனார்னு தெரிஞ்சாத்தான் ஒருபய எட்டிப்பார்க்கமாட்டானே

மதுரையில் கக்கன் நூற்றாண்டுவிழா. நண்டு சிண்டுகளுக்கெல்லாம் வானுயர பேணர்கள். பார்க்கும் நமக்கே சிரிப்பையும் தாண்டி ஒருமாதிரி கூச்சமாயிருக்கு.

கவிதைப் புத்தகங்கள் பன்முகப்பயன் கொண்டவை. பக்கத்துக்கு 4 வரி தவிர மீதமுள்ள காலியிடம் அனைத்தும் பால் கணக்கு பேப்பர் கணக்கெழுத மிக்க உபயோகம்

புத்தகம் முதல்பக்க வாசிப்பு முடியுமுன்னரே அதுபற்றி பதிவெழுத கை அரித்தால், சிரங்குக்கு வைத்தியம் புத்தகத்தை மூடி வைத்து விடுவது தான்.

மதராசபட்டினம் படத்தின் "மேகமே, ஓ மேகமே பாடல்", Rain rain go away பாட்டின் Remix தானே !

100வது ட்விட் ஏதும் சிறப்பாக தோன்றாததால் இந்த இடம் காலியாக விடப்படுகின்றது. இருக்கும் 99ல் பிடித்த ஒன்றை 100வதாக நினைத்துக் கொள்ளுங்களேன்.

பந்த் முழுவெற்றி என்றால் பந்த் முழுவெற்றி என மட்டுமே கொள்ள வேண்டும்.அப்போ, பெட்ரோல்விலை குறைந்து விட்டதா என துடுக்குற்றால் மூக்குடை தான்.

"தி"னாக்கு "தி"னா போடணும்னு திருச்சி திமிங்கலம் என்றெல்லாம் பெயர் வச்சு கொல்றாங்க.திருச்சில எப்படிய்யா திமிங்கலம்? #சன்டிவி சங்கீதயுத்தம்

குடிகார நண்பர்கள் பற்றி ஒரு குறையுமில்லை, குடித்து சலம்பும் போது கூட சேர்ந்து ரசிக்கலாம். ஆனால்... சென்றவாரம் குடித்துவிட்டு சலம்பியது பற்றி இப்பொழுது பெருமையடிப்பதெலாம் ரொம்பஓவர். that that enjoyment,that that time,thatsall இல்லையா?

தொட்டனைத் தூறும் மணற்கேணியெல்லாம் இப்பல்ல, எட்டு இன்ச் போர் போட்டு இறக்கு.
  
திறப்பது மட்டுமல்ல, பூட்டுவதும் அதே சாவி தான் - தத்துவமியம்பிய நண்பனுக்கு அமுக்குப்பூட்டுகள் விதிவிலக்கென்று புதியஏற்பாட்டை பதியச்சொன்னேன்.

******