Tuesday, June 30, 2009

தனித்திருப்பவனின் இரவு (உரையாடல் சிறுகதை போட்டிக்காக‌)



சார், என்னைத் தெரியுதா சார். நல்லாப் பாருங்க, நாம ஏற்கனவே பலமுறை சந்திச்சு இருக்கோம். சார், கண்டுக்காத மாதிரி போறீங்களே !

சின்ன வயசுல, உங்க வீட்டு மொட்டை மாடில நாம விளையாடிட்டு இருக்கும் போது, அந்த பெரிய ரயில் பொம்மையைக் கொண்டு வந்தானே.... எம்ம்ம்ம்மாம் பெரிய ரயில். அதை நம்மகிட்ட காட்டி, காட்டி வம்பிழுத்தானே. நாம ரெண்டு பேரும் சேர்ந்து தானே அதை ........... நல்லா இருந்துச்சுல்ல அன்னைக்கு. இப்போ ஞாபகம் வருதா உங்களுக்கு !

அஞ்சாம் வகுப்புல போயி யாராவது வாட்ச் கட்டிட்டு வருவாங்களா சார். அவுங்க அப்பா வெளிநாட்டுல இருந்தாருன்னா, அந்த குட்டையனும் அங்கயே போய் இருக்க வேண்டியது தானே. சும்மா, சும்மா வாட்ச்சை காட்டி பிகு பண்ணிட்டே இருந்தா கோவம் வரத்தானே செய்யும். எல்லாரும் ஒரே மாதிரி இருக்கனும்னு தானே நாம ரெண்டு பேரும் சேர்ந்து அந்த வாட்ச்சை .......... டீச்சர் க்ண்டுபிடிச்சவுடன் என்னை மட்டும் மாட்டிவிட்டுட்டு நீங்க ஓடிட்டீங்களே, சார். அது கூட உங்களுக்கு மறந்துடுச்சா !

சார், கல்லூரி சமயத்துல கூட, நாம ஒரே ரூம்ல தானே தங்கி இருந்தோம். அப்போ நாம என்ன என்ன பண்ணோம்னு சொன்னா ....... வேணாம் சார், விடுங்க ...... அதெல்லாம் இல்லாம எப்படி ? அது ஒன்னும் பிரச்சனை இல்லை, ஆனா ஒவ்வொரு தடவையும் நீங்க பயந்து, பயந்து சாவீங்க, நான் மனசுக்குல்ல நல்லா சிரிச்சுக்குவேன். இப்போ நீங்க பேசுறதையெல்லாம் பார்க்கும் போது, அது நீங்க தானான்னு லைட்டா டவுட்டு கூட வருது சார் !

ஒரே ஒரு தடவை தான், எப்படி இருக்குனு மட்டும் பார்த்துட்டு வந்துருவோம்னு சொல்லி சொல்லியே யாருக்கும் தெரியாம கூட்டிட்டு போவீங்க. எனக்கு நல்லா பழக்கப்படுத்தி விட்டுட்டு, இப்போ நீங்க பொண்டாட்டி, புள்ள குட்டின்னு செட்டில் ஆகீட்டீங்க. ஆனா, என்னால இன்னும் அதை விட முடியல தெரியுமா !

சார், நீங்க பெரிய ஆளு சார், எப்போ பார்த்தாலும் பெரிய பெரிய ஆளுங்களோட தான் சுத்துறீங்க, பெரிய பெரிய அட்வைஸ் எல்லாம் சொல்றீங்க. ஆனா பாருங்க, எப்பவும் உங்க கூடவே இருக்குற என்னை மட்டும் அவுங்க முன்னாடி கண்டுக்கவே மாட்றீங்க. அது சரி, பெரிய ஆளுங்க பேச்சைக் கேட்டா மட்டும், எனக்கென்ன புரியவாப் போகுது !

உங்க மேல, எனக்கு ரொம்ப வருத்தம் சார். நீங்க கூப்பிட்டு தானே, நான் அன்னைக்கு நைட்டு உங்க கூட அங்க வந்தேன். சத்தம் கேட்டவுடனே என்னை அங்கேயே விட்டுட்டு நீங்க மட்டும் ஓடி வந்துட்டீங்க, நான் இன்னும் அங்கேயே தான் நின்னுட்டு இருக்கேன் தெரியுமா !

எல்லாமே, ரெண்டு பேரும் சேர்ந்து தானே சார் செஞ்சிட்டு இருக்கோம். பின்ன எப்படி நீங்க மட்டும் என்னைத் தெரியாத மாதிரி பாவ்லா பண்ணிட்டு, இராத்திரியானா நிம்மதியா தூங்குறீங்க ..... நான் உங்க குறட்டை சத்தத்தைக் கேட்டு தூக்கம் வராம தவிச்சிட்டு இருக்கேன். இப்போக் கூட பாருங்க, யாருக்கோ கதை சொல்ற மாதிரி, நீங்க பாட்டுக்கு சுவாரஸ்யமா படிச்சிட்டு இருகீங்க. எனக்கு தான் சார், நீங்க ஏன் இப்படி இருக்கீங்கன்னு மண்டைக்குள்ள எறும்பு போன மாதிரி ஊறிட்டே இருக்கு !

Wednesday, June 24, 2009

எப்படித்தான் தேடிக் கண்டுபிடிக்கிறாங்களோ !!!!!


ஒரு ஆரோக்கியமான பொழுதுபோக்காக, பணிக்கு, அன்றாட நடைமுறைகளுக்கு இடையூறு இல்லாத செயலாகத் தான் இதை நினைத்திருந்தேன். ஆனால் முற்றிலும் எதிர்பார்க்காத போது, நம்மீது விழும் சிறு வெளிச்சம் கூட‌ பரவசம் கொள்ளச் செய்வது உண்மை தான். நாமும் கவனிக்கப்படுகிறோம் என்ற உற்சாகம் தரும் உந்துசக்தி இன்னும் சிறப்பாக செயல்பட நிச்சயமாக‌ உதவும்.

போதும், ஓவர் பில்டப் ..... என்னோட வலைப்பதிவு பத்தி இந்த வாரம் "கல்கி" இதழ்ல (28/06/2009 இதழ், 72ம் பக்கம்) நாலு வரி பாராட்டி எழுதி, வலைப்பதிவு பெயரை வாசகர்களுக்கு அறிமுகம் செஞ்சு வச்சிருக்காங்க. கல்கிக்கு நன்றிகள் பல.
எப்போதும் உடன்வரும், உற்சாகமளிக்கும், கிண்டலடிக்கும், ஓட்டும், குட்டும், படித்துவிட்டு எஸ்கேப் ஆகும், படிக்காமலே பாராட்டும் நண்பர்கள் அனைவரும் நடத்தப் போகும் பாராட்டு விழாவிற்கு நன்றி சொல்லி அவர்களை அந்நியப்படுத்த விரும்பவில்லை. :)


விரைவில் சந்திப்போம்....

நட்புடன்,
வி.பாலகுமார்.


Friday, June 5, 2009

பெயரில்லாதது

எங்கள் தெருவில் பைக்கில் சென்றுகொண்டிருக்கும் போது, ஒரு சின்ன சந்தில் திரும்புகையில், குட்டி சைக்கிள் ஓட்டிட்டு வந்த ஒரு அஞ்சு வயசு பையன் குறுக்கால புகுந்த்துட்டான்நான் சுதாரிச்சு பைக்கை சைடு சுவர்லசாய்ச்சு நிறுத்திட்டேன். அந்த குட்டி, சைக்கிள் ஓட்டிட்டு வர்றஅழக பார்த்து எனக்கு சிரிப்பு வந்தது. நான் சிரிச்சது அதுக்கு கோவம் வந்திருச்சு போல. டக்குன்னு சொல்லிச்சு,
 "அண்ணே  பார்த்த்ப்போண்ணே! நான் மெதுவா வந்ததால தப்பிச்சீங்க"
 "சரிங்க சார்,  ஸாரிங்க சார் :) " சிரித்துக்கொண்டே கிளம்பினேன்
கடவுளின் ஸ்பரிஸம், அப்பபோ கிடைக்கத் தான் செய்கிறது.
**************************************
 சென்ற வாரம் ஏதோ ஒரு சேனலில், "அறை எண் 305ல் கடவுள் ஓடிக்கொண்டிருந்தது. வசனங்கள் சில, பல இடங்களில் நன்றாக இருப்பது போலத் தோன்றவே, தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். கடவுள் பவர்(?) கிடைத்த சந்தானம், ஒரு கட்டத்தில் மென்பொருள் துறையினர் அதிக சம்பளம்  வாங்குகிறார்கள் என்பதற்காக, அவர்களின் விரல்களை மொன்னையாக்கி விடுவார். நான் சேனலை மாற்றி விட்டேன்.
 என்ன ஒரு தட்டையான சிந்தனை !!! 
**************************************
 நண்பர் ஒருவருடன் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொன்னார்
"இந்திய கிரிக்கெட் உருப்படவே உருப்படாதுப்பா
"ஏங்க அப்படி சொல்றீங்க?"
 "பின்ன என்ன, இப்போ உலகக் கோப்பை போட்டிக்கு ஜடேஜாவை டீம்ல எடுத்துருக்காங்க?" 
"அதனால என்னங்க, சமீமபா, அவர் நல்லாத் தானே விளையாடிட்டு இருக்கார்." 
"இருந்தாலும், சூதாட்ட ஊழல்ல சிக்கினவரைப் போயி ........"
 "ஹலோ, அது வேற ஜடேஜாங்க"
 "என்னதான் இருந்தாலும் ஜடேஜா, ஜடேஜா தானேப்பா." 
(அடங்கொய்யால, அவனா நீ, இவ்வளவு நேரம் இது தெரியாம பேசீட்டு இருந்துட்டேனைய்யா? )
**************************************
 கடந்த ஞாயிறு அன்று, " நீயா,நானா?" பார்த்துக் கொண்டிருந்தோம். யாரையும் சேனல் மாற்றவிடாமல், நான் உன்னிப்பாக நிகழ்ச்சியை கவனித்துக் கொண்டிருந்தேன். என் தம்பி கேட்டான்.
 "என்ன, இன்னிக்கி அதிசயமா, இவ்வளவு ஆர்வமா நிகழ்ச்சிய பார்த்துட்டு இருக்க?"
 "இல்ல, எனக்கு தெரிஞ்வர் இன்னிக்கி கெஸ்ட்டா வர்றார்"
 அவர் வந்து பேச ஆரம்பித்தார்.  நன்றாகப் பேசினார்.
 தம்பி மறுபடி கேட்டான்,
 "யாரு, காலேஜ் ஃப்ரண்டா?"
 "இல்ல
"கூட வேலை பார்க்கிறவரா?"
 "இல்ல"
 "பின்ன?"
 "ப்ளாக் ரைட்டர்"
 "!"
 (அந்த ""விற்கு என்ன அர்த்தமென்று எனக்கு இன்னும் புரியவில்லை :) ஆனந்த விகடன்ல கவிதை எழுதுறவர்னு சொல்லி இருக்கனுமோ!  )
**************************************
 அப்புறம் சின்னதா ஒரு ............... 
ஓரே கூட்டம்...
பட்டனிப் போரட்டமும்,
உணவுத் திருவிழாவும்
அடுத்தடுத்த மேடைகளில்.
**************************************
 இந்த மாதிரி பிட்டு, பிட்டா எழுதுறதுக்கு என்ன பெயர் வைக்கலாம் ரொம்ப நாளா யோசிச்சிட்டே இருக்கேன். அவியல், குவியல், பொறியல், டரியல், இட்லி, சாம்பார், சட்னி,வடை, பொங்கல், புளியோதரை, பட்டாணி, சுன்டல், பஞ்சாமிருதம், ஜிகிர்தண்டா,காக்டெய்ல், ஊறுகாய் னு எல்லாரும் ஆளுக்கொரு பேரா, காபிரைட் வாங்கி வச்சிருக்காங்க. எனவே, இப்போதைக்கு தனிப்பெயர் இல்லாமலே போஸ்ட் பண்றேன். ஏதாவது நல்ல தலைப்பு தோனுச்சுன்னா, பின்னூட்டத்துல சொல்லுங்க‌ மக்களே !!!!
**************************************