Thursday, August 21, 2014

சமாதானம்

ஏழெட்டு தவணை தவறிப் போனதற்காக
வீட்டுப் பெண்ணை கூப்பிட்ட
தண்டல்காரன் முன்
தலைகவிழ்ந்து நின்று விட்டு
அவன் போன பின்பு
“கண்டார*** மக உன்னால தான்டி எல்லாம்...
மினுக்கிட்டு முன்னால வந்து நிக்குறா!”
என்று மனைவியை அறைகிறான் சம்சாரி

”இந்த பொழப்புக்கு நாண்டுகிட்டு தொங்கலாம்”
என்ற வார்த்தைகளை கடந்து செல்ல
ஏதாவதொரு சமாதானம்
தேவையாய் இருக்கிறது அல்லது
போதுமானதாய் இருக்கிறது

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

No comments:

Post a Comment