Thursday, August 16, 2012

புத்தர் செத்தார், சித்தார்தன் சிரித்தான்

சில ”முத்துவ தத்துக்கள்”

ஒலிம்பிக்ஸில் பாகிஸ்தானுக்கு எத்தனை பதக்கம் என்றான் தம்பி. ஒன்றுமில்லை என்றவுடன், “அப்போ சரி, பாரத் மாதா கீ ஜே!” என்கிறான்.

******
பெண்களின் ஷாப்பிங் உலகில் வேண்டாத பொருள் என்றொரு கேட்டகிரியே கிடையாது.

******
தம்மை அறியாத தயிர்சாதங்கள், அதிகமாய் பேசுகையில் சட்னியாக்கப்படுகின்றன.
#சும்மாவொருகருத்து

******
காற்றை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விற்கும் வித்தையை ‘லேஸ்’ சிப்ஸ் தயாரிப்பவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும்

******
முதன்முறையாக ‘கோட்’ அணிபவன் பத்து நாளானாலும் அதைக் கழட்ட மாட்டான் என்பது தான் ‘சகுனி’ படம் நமக்குச் சொல்லும் செய்தி

******
"சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் வழங்கும் ஆடுகளம்” என்பது தானே படத்தின் பெயர். அதை விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியில் ஏன் எப்போதும் சுருக்கி வெறும் ‘ஆடுகளம்’ என்றே சொல்கின்றனர்?
#அப்பாவி கோயிந்து

******
எஸ்.ரா புத்தகம் எதையாவது வாசிக்க ஆரம்பித்த உடனேயே, மாமல்லன் தான் வந்து மனசுல உட்கார்ந்துட்டு ஏதாவது குறை சொல்லிட்டே இருக்கார்.
#இந்த இணையம் ரொம்ப மோசம்ப்பா.

******
அரசின் கிராமப்புற வளர்ச்சித் திட்டம் பிரமிக்க வைக்கிறது. மதுரைக்குள் கிடைக்காத ஸ்பெஷல் சரக்கெல்லாம் வைகை டேம் செல்லும் வழியில் கருமாத்தூர், ஆண்டிப்பட்டி ஊர் டாஸ்மாக்’களில் எப்போதும் கிடைக்கிறது.

******
ஆயிரம் தான் விமர்சனங்கள் இருந்தாலும், லாப நோக்கத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி தான் என்றாலும் ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி” மூலம் விஜய் டீவியின் சமுதாய் பொறுப்புணர்வு பாராட்டுதற்குரியது. 
கடைசி வாரம் கூத்தாடிகள் செய்த அலப்பறைகள் சகிக்கவில்லை, மோசமான அனுபவத்துடன் முடிக்கிறார்களே என்ற வருத்தம் இருந்தது. இன்று மிக அருமையான நிறைவு விழா கொடுத்தார்கள். வெல்டன் டீம், வாழ்த்துகள் சூர்யா !

#ஆனாலும் வாய்ல மாவாட்டி ஆட்டி பேசுறத கொஞ்சம் தவிர்த்திருக்கலாம்.  :)

******
இணைய நடுநிலையாளர்களின் ”அரிய சிந்தனைகளை” எல்லாம் மதித்து இந்த உடன்பிறப்புகள் ஏன் விலாவாரியாக பதில் அளிக்கிறார்கள் என எண்ணுவதுண்டு.

”ஆனால் இந்த கேனைத்தனமான கேள்விகளுக்கு பதில் சொல்வதன் மூலம் சமூதாயத்தில், மேடைகளில், செய்தித்தாள் டீவி பேட்டிகளில், டீக்கடைகளில் , அலுவலகத்தில், கல்லூரிகளில், இணையம் சாராத பெரும்பான்மையினரிடம் (மொத்தமாகவென்றால் பொது மக்களிடம்) திமுக பற்றி எடுத்துச் சொல்ல (சமாளிக்கவும்) நிறைய பயிற்சி கிடைக்கிறது” என்றார் உடன்பிறப்பு நண்பரொருவர்.

நான் யோசிச்சேன், இங்க கேக்குற மாதிரி அறிவுப்பூர்வமான கேள்விகளை நடுநிலையாளர்கள் சமுதாயத்தில் கேட்டால் என்னவாகும்?

# ஒன்னு வாயிலயே குத்துவான், இல்ல கல்லால அடிப்பான்.
# என்னமோபோங்க !
******

புத்தர் செத்தார், சித்தார்தன் சிரித்தான்.



******************* 

1 comment:

  1. ஹா... ஹா... நல்லா இருக்குங்க...

    தொடருங்கள்... நன்றி…

    ReplyDelete