Monday, November 19, 2012

"உருவெளித்தோற்றம்” - சிறுகதை


அக்டோபர் 2012 - “கதவு” சிற்றிதழில் எனது சிறுகதை “உருவெளித்தோற்றம்” பிரசுரமாகியுள்ளது. 

நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி.



(தெளிவாக படிக்க, படத்தின் மேல் சுட்டவும்)

Add caption
நன்றி : இதழ் ஆசிரியர் திரு.மதி கண்ணன் ( maveepaka@gmail.com )

Tuesday, November 6, 2012

துறவுரை



துறவுரை
-----------------------

காற்றிலிட்ட கற்பூரம் போல
மெல்லமாய், மௌனமாய்
கரைந்து காணாமல் போகவே விரும்புவேன்,
என் தலைப்பாடுகளின் கடவுச்சொல்லை
மூடி வைத்திருக்கும் பெட்டகம்
முளைவிடுமா, முடநாற்றம் வீசுமா
என்ற அச்சம் மட்டும் இல்லாதிருந்தால்

துறவுரை எழுதிச் செல்லும்
நாட்குறிப்பின் கடைசிப் பக்கத்தில்
கைவிரல் ரேகை பதிக்கும் போது,
புத்தர் இறந்தார்,
சித்தார்த்தன் சிரித்து விட்டு வீடு திரும்பினான்.


- வி.பாலகுமார்

( 05/11/2012 தேதியிட்ட “உயிரோசை” இணைய இதழில் வெளிவந்துள்ள எனது கவிதை.
நன்றி : http://www.uyirmmai.com/Uyirosai/contentdetails.aspx?cid=6062 )