Wednesday, May 7, 2014

நினைவு


கண்ணாடி சட்டத்துக்குள்
சாஸ்தவமாயிருக்கும்
செம்பருத்தியின் புன்னகையை
ஏக்கத்துடன் பார்க்கிறது
ஊர்ந்து செல்லும் எறும்புச் சாரை.

குளிரூட்டப்பட்ட அரங்கிற்கு
வெளியிலிருந்து எட்டிப்பார்க்கும்
பட்டாம்பூச்சியை நினைத்து
விசனம் கொள்கிறது
உறைந்திருக்கும் பூவின் ஆன்மா.

*****

1 comment:

  1. மிக மிக அற்புதம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete