Wednesday, August 20, 2014

கனிந்ததொரு பார்வை

அவநம்பிக்கையின் நிழல்
படரத் துவங்கும் தருணத்தில்
எப்படியோ ஒரு பெருமழை
பொழிந்து விட்டுச் செல்கிறது

பருவம் பொய்த்து
வாய்பிளந்து கிடக்கும் நிலங்களைப்
பார்க்கும் போதெல்லாம்
அனிச்சையாய் ஒரு நேர்த்திக்கடன்
மனதிற்குள் வேண்டப்படுகிறது

இத்தோடு விலகிக் கொள்ளுங்கள்
என்ற அறிவிப்பை
எந்தக்கூட்டுப்பிரார்த்தனையும்
சொல்லிக் கொடுப்பதே இல்லை

யாரோ போகிற போக்கில்
பார்த்துவிட்டுச் சென்ற
ஒரு கருணைப்பார்வையில்
பட்ட மரங்கள் துளிர்விட்ட
கதைகள் நமக்குத் தெரியும் தானே !

நன்றி: மலைகள் இதழ் http://malaigal.com/?p=5419
******

1 comment: