Wednesday, June 6, 2012

உலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் லேகியம் வரை!

அப்போதைக்கப்போது தோன்றும் கோட்டிக்கார சிந்தனைகளை குறிப்புகளாக்கி "தகவல்பிழை” என்று வால் ஒட்டி கூகிள் பிளசில் பதிந்து வருகிறேன். அவற்றுள் சில இங்கேயும்...
******************************************

வயிற்றில் பரிபூரணமடைந்து நெஞ்சை மறைத்து கழுத்திலும் வளர ஆரம்பிக்கும் போது தான், தொப்பை பற்றிய கவலை மறைந்து நாம் ’அங்கிள்’ ஆகிக்கொண்டிருக்கிறோம் என்ற நிதர்சனம் உறைக்கிறது

#டூலேட்
******************************************

அவனுக விலைய ஏத்துறது கூட கடுப்பாகல, இவனுக அதுக்குள்ள பங்க் ல க்யூ கட்டி நிக்கிறது தான் செம காண்டாகுது. மிஸ்டர் பொதுஜனம், உங்கள அடிச்சுக்க ஆளே இல்ல !!!

#பெட்ரோல்விலையேற்றம்
******************************************

வண்ணதாசன் கதைகளை வாசிக்கும் போது, இயக்குநர் (ராபர்ட்) ராஜசேகரின் குரல் தான் கேட்கிறது, கல்யாண்ஜிக்கு இந்த பிரச்சனை இல்லை.
******************************************

உலக இலக்கியத்திலிருந்து உள்ளூர் லேகியம் வரை எல்லாத்தயும் கரைச்சு குடிக்கிறோம். சூர்யாவை மீட் பண்றோம். அசால்டா பதினஞ்சு கேள்விக்கு பதில் சொல்றோம். ஒரு கோடியை அள்ளுறோம்.

ஒரு கோடியை வச்சு என்னன்ணே செய்றோம்?

கேக்குறாம் பாரு கேள்வி. நம்ம பேரு சரித்திரத்துல நிக்கனும்டா. ஒரு வட்டம் ஆரம்பிக்கிறோம். இப்ப எழுதிட்டு இருக்க எல்லா பயலுகளுக்கும் நம்ம பேரப் போட்டு ஆளுக்கொரு விருது கொடுக்குறோம், விழா எடுக்குறோம், போட்டோ பிடிக்கிறோம். நம்மள பாராட்ட நாலு பேரு, ரொம்பக் கேவலமா திட்ட நாலு பேரு செட் பண்றோம். லைம்லடலயே நனையுறோம். மொத்தத்துல உலக் இலக்கியத்தை வளக்குறோம்டா !!!

#அப்ரண்டீஸ் ஆசைகள்

#ரிகர்ஸிவ்புனைவு 
******************************************

"பார்க்கிங் லேனில்” வண்டிகளை குறுக்கும் நெடுக்குமாக நிறுத்தும் நம் மக்கள், ”நோ பார்க்கிங்கில்” மட்டும் கர்மசிரத்தையாக வரிசையில் நிறுத்துகின்றனர்.
******************************************

ஓசி பாஸில் படம் பார்ப்பவர்கள் தாம், திருட்டு டிவிடிக்கு எதிராய் பிரச்சாரம் செய்கிறார்கள்.
******************************************

பல குறுநில மன்னர்களைக் கொண்ட ராஜாங்கத்துக்கு ஆபத்து வந்து திகார் செல்ல நேர்ந்தாலும் தாங்கிக் கொள்ள சிற்றரசர்கள் இருக்கிறார்கள். அடிமைகளை வைத்திருக்கும் பிரைவேட் கம்பெனி ஓனர்கள் பாவம், பெங்களூருக்குக் கூட தாமே தான் செல்ல வேண்டியிருக்கிறது !

#பகுத்துண்டு வாழுங்கள்!
******************************************

ஆடாத ஆட்டம் ஆடுபவர்களை எல்லாம், ஒரே ஒரு நாள் முழுதும் அரசு மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் ”சும்மா” உட்கார வைத்தாலே போதும். சர்வமும் அடங்கி விடும்

#அரசாங்க ”இளம்”மருத்துவர்கள் தெய்வங்கள்
******************************************

மாற்றுப் பெயரில் புனைவு எழுதுவதெல்லாம் சரி தான். ஆனால் அதை பிரபலப்படுத்த சொந்த பெயரில் விளம்பரம் செய்யும் போது தான் கொண்டை தெரிந்து விடுகிறது.

# “இவன் தான் மாப்ள, எங்கயோ செமத்தியா வாங்கி இருக்கான். இங்க வந்து வேற யாரோ மாதிரி கதை விட்றான்” :)
******************************************

போட்டி முன்னாடியே, என்ன முடிவு பெட்டிங்ல இருக்குன்னு நமக்கும் சொல்லிட்டா நாமும் சேர்ந்து கிரிக்கெட்டை என்ஜாய் பண்ணலாம். 

#overacting boys:(

#IPL
******************************************

ஆன்லைன்ல புக் பண்ணா தான் கேஸ் சிலிண்டர் சீக்கிரம் கிடைக்குதாம் என்றதற்கு "கம்ப்யூட்டர் தெரிஞ்சவன் மட்டும் வாழ்ந்தா போதும், மத்தவனெல்லாம் உத்தரத்துல தொங்கிட்டு போய்ச் சேரவேண்டியது தான்" என்கிறார் ஒரு நண்பர்.

:( என்னசொல்ல?
******************************************

பிரபலங்களுக்கழகு சாமானியர்களுடன் சேராதிருத்தல் !

# பேசிட்டு இருக்கும் போதே திடுதிப்புன்னு டவுசரை அவுத்து விட்டுருதுக பயபுள்ளய்க
******************************************

இணைய பிரபலங்கள் பிராய்லர் கோழி போல... செழிப்பாக இருக்கிறார்கள், ஆரோக்யமாக அல்ல!
******************************************

அப்பாவின் பேண்ட்டை ஆல்டர் செய்து அணிய நினைக்கும் அண்ணன் தம்பிகளுக்கு கடைசியில் அண்டர்வேர் தான் மிஞ்சுகிறது 

#நோ அரசியல், ஒன்லி ஃபைவ் ஸ்டார்
******************************************

இந்த இணைய அப்ரசண்டீஸ் ”அதிமுக” நடுநிலையாளர்கள் செய்கின்ற அறிவுப்பூர்வமான விவாதங்களை எல்லாம் பார்க்கும் எனக்கு ஒரே ஒரு பயம் தான்... “இவனுக நம்ம திமுக காரன் ஆக்காம விட மாட்டனுக் போலயே!”
******************************************

அலுவலகத்தில் ஒரு கதையை சொல்லி லன்ச் டைமோட சேர்த்து ஒரு மணிநேரம் பெர்மிஷன் போட்டுட்டு, மெதுவாக மதுரை-சிவகங்கை நெடுஞ்சாலையில் ஒரு 40 கி.மி தூரம் பைக்கில் ஜாலியா ஒரு ரைடு போய்ட்டு வந்து, அகமும் புறமும் குளிரக்குளிர ஈரக்கையோட டைப்பிங்.

#மாமழை போற்றுதும் !!!
******************************************

2 comments:

  1. எல்லாமே அருமையாக இருந்தது. அதில் அந்தப் பெரியாஸ்பித்திரி அவசரவார்டு ரொம்ப அருமை. கொஞ்சநாள் பெரியாஸ்பித்திரிக்குள்ள சுத்திட்டு யோகா வகுப்புக்கு போய் உடம்ப ஒழுங்கா பாத்துக்கணும்ன்னு சபதம்லாம் எடுத்து இருக்கேன்.
    நல்ல பதிவு. நன்றி.

    ReplyDelete
  2. //வண்ணதாசன் கதைகளை வாசிக்கும் போது, இயக்குநர் (ராபர்ட்) ராஜசேகரின் குரல் தான் கேட்கிறது,//

    ?????????????

    ட்விட்டர் இம்புட்டு நல்லாயிருக்குமா? தெரியாதே!

    ReplyDelete