Thursday, July 14, 2011

செவியிடை மனிதர்கள் - 2

ஹலோ, யாரு பேசுறது ?

நீங்க தானே கூப்டிங்க, நீங்க யாருனு சொல்லுங்க?

ஹலோ பாலா, உங்களைக் கூப்பிட்டுட்டேனா! ஸாரி...

பரவால்ல, நீங்க யாருன்னு தெரியலையே.... ஹலோ...

டிக். (போன் கட்)

(இரண்டு நிமிடத்திற்கு பிறகு, மறுபடியும் அதே நம்பரிலிருந்து...)

ஹலோ, யாரு பேசுறது ?

ஹலோ, மறுபடியும் என்னைத் தான் கூப்பிட்டு இருக்கீங்க.

ஸாரி, நீங்க யாரு?

நீங்க தானே கூப்டிங்க, நீங்க முதல்ல சொல்லுங்க.

ஓ ! ஸாரி பாலா ... மறுபடியும் உங்களையே கூப்ட்டேனா....

அது சரிங்க, நீங்க யாரு ? என்ன நம்பர் டயல் பண்ணனும்?

டிக்.

(மறுபடியும் அடுத்த நிமிசமே அதே 'கால்' வர இம்முறை நான் எடுக்கவில்லை. உடனே அடுத்து குறுஞ்செய்தி.

"ஸாரி பாலா, தெரியாம உங்களைக் கூப்ட்டுட்டேன், ரியலி ஸாரி."

# டேய், யாருடா நீ உனக்கு என்ன தான் வேணும். 

ஸாரி, ஸாரி னு சொல்லி கழுத்தறுக்குற சனியன் யாருன்னு மட்டும் சொல்லித் தொலைய மாட்டுது.

ஆனா ஒன்னு மட்டும் புரியுது. "நீ அந்த வேலைக்கு சரிப்பட மாட்ட" ன்னு  எல்லாரும் சொன்னப்ப வடிவேலு மனசு எப்படி உறுத்தி இருக்கும்னு இப்ப நல்லா தெரியுது.


3 comments: